Thursday 10 October 2013

கல்லறைப் பூஞ்சோலை



பாவையின் பார்வையால்
பதிந்தப் பாசவிதை
புதுப்பிறவி எடுத்து
பூத்துக் குலுங்கியது
அவனது இதயச் சோலையில்
அவளுக்காக

அவனது.......
கல்லறை இதயத்தின் மீது



சூடுவதர்க்கோ அருகில் அவளில்லை
ஏந்தி நிற்கவோ இங்கு இவனுமில்லை
எஞ்சி இருப்பது என்னவோ
பூக்களும் பூவின் கண்ணீரும் தான்

அவன் குருதியில் குளித்துப் பூத்திட்ட
பூக்களும் புன்னகைக்கிறது
அந்த ரத்தச் சகதியிலும்
தன்னிலை மறந்து...

No comments:

Post a Comment