தாளில் படைத்திட்ட
சரித்திரம் அல்ல
குருதியில் குளித்திட்ட
ரத்தச் சரித்திரம்
இது தமிழனின்
தாயகச் சரித்திரம்
புல்லென நீ நினைத்துவிட்டாய்
பொசுக்கென பிடிங்கிட
கனவும் கண்டுவிட்டாய்
கனவு கலைந்தப்பின்
உன் கண்களும் மிரளுமடா
என் தாய் மண்ணில்
மலர்ந்திட்ட மலரும்
உன் தலை கொய்ய நிற்குமடா
கொஞ்சம் பொறு
மாமிச பிண்டமே...
செங்குருதியில் பிறந்திட்ட
வீரம் இன்னும்
சோர்ந்துவிடவில்லை
பிஞ்சு பிரவாகத்தில்
நான் வீரிட்ட சத்தம்
வலியினால் அன்று
என் தமிழன் மானம் காக்க
அன்றே உரைத்திட்ட உரை அன்றோ...
வெற்றி காணாது புதைந்துதான் போயின
என் சகோதரதீரங்கள்
என் சகோதரதீரங்கள்
என எவர் உரைத்துத் தான்
சென்றிடினும்
தாய் தந்த தேகம்
புதைந்துதான்
போயினும்
புரட்சித் தான் புரளாதோ
இப்பாரினில் நான் காணும்
தமிழீழம் நிலைபெரும்வரை
புரட்சித் தான் புரளாதோ
இப்பாரினில் நான் காணும்
தமிழீழம் நிலைபெரும்வரை
நிலை கொள்ளும்
காலம் வரை
என் மனமிங்கு வீழாதே
சண்டாளர்களின் சாவு காணும் வரை
என் தமிழன் தலை சாயாதே
என் மனமிங்கு வீழாதே
சண்டாளர்களின் சாவு காணும் வரை
என் தமிழன் தலை சாயாதே
No comments:
Post a Comment